விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

பாலமுனை றைஸ்டார் விளையாட்டு கழகத்துக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு மற்றும் கௌரவிப்பு என்பன பாலமுனையில் அண்மையில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபையின் கணக்காளர் எம்.எப்.பர்ஹான் தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி உபகரணங்களை கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார்.

இதன் போது கழகத்தின் வீடு சென்று வாழ்த்துவோம் திட்டத்திற்கமைவாக பாலமுனை மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியில் 2019 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் அனைத்து பாடங்களிலும் ”ஏ” தரச் சித்தி பெற்ற மாணவன் அல் - ஹாபிழ் ஏ.ஸிப்கான் றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் நிருவாகத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை