வீட்டுக்குள் உயிரிழந்தவர் 3 ஆண்டுகளின் பின் மீட்பு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் உடல் அவரது வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரொனால்ட் வெயின் என்ற அந்த ஆடவர் காணாமல்போயிருப்பது பற்றி பொலிஸாருக்கு பல தடவைகள் முறையிட்டதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ரொனால்ட் மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெற்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் தொடர்ச்சியாக தண்ணீர் பயன்படுத்தப்படாமல் இருப்பது பற்றி அடுக்குமாடிக் குடியிருப்பு நிர்வாகத்தினர் சோதனை செய்தபோதே 51 வயதான ரொனால்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த அதிகாரிகள் ரொனால்ட் சமையலறையில் விழுந்து கிடந்த நிலையில் உயிரிழந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஆடவர் தனியாக அந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், வீட்டின் அனைத்துக் கதவுகளும், சன்னல்களும் மூடப்பட்ட நிலையில் இருந்ததால் எந்தவித துர்நாற்றமும் வெளிவரவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை