மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் 14 இலங்கையர் கைது

லக்ஷ்மி பரசுராமன்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்திய 14 இலங்கையர்களை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பிரதேசங்களைச் சேர்ந்த 30 தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட ஆண்களென்றும் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரட்ண தெரிவித்தார். இவர்கள் சென்னையிலிருந்து நேற்றுமுன்தினம் காலை 7.30 மணியளவில் எ1273 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க

 விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களிடமிருந்து மொத்தமாக 4.7 கிலோ நிறையுடைய தங்க நகைகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். காற்சட்டைப் பைகளுக்குள்ளும் பாவித்த ஆடைகளிற்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்தே இந்த தங்க நகைகள் மீட்கப்பட்டன.

இவற்றின் மொத்த பெறுமதி 03 கோடியே 19 இலட்சத்து 75 ஆயிரத்து 180 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள் அவற்றை கடத்தியவர்களை தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை