நம்பகமான அரசியல் தலைவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்

“நாட்டு மக்களின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்து கொள்ளக் கூடியவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆவார். நம்பகமான அரசியல் தலைவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் .

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கிளையில் கடந்த (27) நடைபெற்ற சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், சஜித் பிரேமதாச போட்டியிடுவதற்காக கிடைத்த அங்கிகாரமே மக்கள் அளிக்கும் வாக்கின் மூலம் இவ்வெற்றி கிடைக்கவிருக்கின்றது.

இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகமும் இன ஒற்றுமையுடனும், சமய, கலாசார வழிமுறைகளுடனும் வாழ்வதற்கான நம்பிக்கையில் வாழ்வதற்கும் கடந்த ஆட்சி காலத்திலும் இந்நாட்டு மக்களுக்கு கிடைக்காத பல்வேறு குடியிருப்பு, விவசாயம், மீன்பிடி, வாழ்வாதாரம் தொழில் வாய்ப்பு போன்ற அபிவிருத்திகளை கிராமிய மக்களும் பெற்று நன்மையடைக் கூடிய வகையில் அவரால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

மேலும் மூவின சமூகத்தையும் பாதுகாக்கவும், கடந்த காலங்களில் நடந்த இனத்துக்கான அநீதியை புறந்தள்ளி சகலருக்கும் சம அஸ்தத்தை வழங்கக் கூடிய ஒரு தலைவரை நாம் பெற்றுக் கொள்ளவும் ஒருமித்த மக்கள் பலமே எமது வாக்குப் பலம் என்றார்.

மூதூர் தினகரன் நிருபர்

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை