இவரை காணவில்லை

திருகோணமலை- ரொட்டவெவ மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயது உடைய உளநலம் பாதிக்கப்பட்ட பாத்திமா றிஸ்லா என்ற யுவதி காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜூனைதீன் முகம்மட், ஜறூக்-சிரோமா குமாரி பத்தவிதான ஆகியோரின் மகளான உளநலம் பாதிக்கப்பட்ட யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த சனிக்கிழமை வீட்டாருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாகவும், அவர் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பில் யாராவது தகவல் தெரிந்தால் உடனடியாக மொரவெவ பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு 0262225822 அல்லது அவரது தந்தையின் தொலைபேசி இலக்கமான 0768817120 எனு‌ம் இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பெற்றோர் கோரிக்கை விடுகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை