பளுதூக்கலில் கிழக்கு மாகாணத்துக்கு முதல் பதக்கம் புதிய வரலாறு படைத்தார் கிரிஜா

தேசிய விளையாட்டு விழா:

விளையாட்டுத்துறை அமைச்சு,விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள 45 தேசிய விளையாட்டு பெரு விழாவின் ஓர் அங்கமான பளுதூக்கல் போட்டிகள் கொழும்பில் உள்ளடொரிண்டன் உள்ளகஅரங்கில் கடந்த 10ஆம் திகதிமுதல் 12ஆம் திகதி வரை நடைபெற்றது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகின்ற இம்முறைபோட்டித் தொடரில் வடக்கு,கிழக்குஉட்பட ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த 300இற்கும் அதிகமானவீர,வீராங்கனைகள் இம்முறைபோட்டித் தொடரில் பங்குற்றியிருந்தனர்.

போட்டியின் முதல் நாளான்று நடைபெற்றபெண்களுக்கான 71 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டயோகராஸா கிரிஜா வெண்கலப் பதக்கத்தைவென்றுசாதனைபடைத்தார்.

இவர் ஸ்னெச் முறையில் 45 கிலோகிராம் எடையையும்,க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 65 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டு மொத்தமாக 110 கிலோகிராம் எடையைத் தூக்கி இந்தவெற்றியைஅவர் பெற்றுக் கொண்டார்.

45 வருடகால தேசிய பெரு விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் கிழக்கு மாகாணம் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமாக இது பதிவாகியதுடன், இந்த சாதனையை நிகழ்த்தியமுதல் வீராங்கனை என்றபெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

சுமார் ஓன்பது வருடங்களாக பளுதூக்கல் போட்டியில் ஈடுபட்டு வருகின்ற கிரிஜா,தனது வெற்றி குறித்து,

தேசிய விழா வரலாற்றில் கிழக்கு மாகாணத்துக்கு பளுதூக்கல் போட்டியில் முதல் பதக்கத்தினை வென்றுகொடுக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

நான் திருகோணமலை செல்வநாயகபுரம் தமிழ் மகாவித்தியாலத்தில் கல்விகற்றேன். தரம் 8இல் இருந்துவிளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிவருகிறேன். நான் ஆரம்பத்தில் மெய்வல்லுநர் போட்டிகளில் தான் அதிக கவனம் செலுத்தியிருந்தேன்.

எனினும், 2010ஆம் ஆண்டுமுதல் தான் பளுதூக்கல் விளையாட்டை பகுதிநேர விளையாட்டாக செய்துவந்தேன். அதேபோல கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறிதுகாலம் பளுதூக்கல் விளையாட்டில் இருந்து விலகியிருந்தேன்.

தான் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தில் உள்ள உமா சுதன் ஆசிரியரின் வழிகாட்டல் மற்றும் ஊக்கப்படுத்தல் என்பவற்றுடன் மீண்டும் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தேன்.

2010இல் நடைபெற்ற தேசிய பெருவிழாவில் 7ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டேன். மீண்டும் 2016இல் தேசியமட்ட பளுதூக்கலில் பங்குகொண்டேன். தொடர்ந்து 2017இல் ஐந்தாவது இடத்தைப் பெற்றேன். தற்போது இந்தவருடம் 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.

எனவே உமாசுதன் ஆசியரின் ஊக்கப்படுத்தலினால் இன்று நான் தேசிய மட்டத்தில் பதக்கமொன்றை வெற்றி கொண்டேன். ஆனாலும்,பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எந்தவொரு வசதிகளும் இல்லாமல் தான் இந்தப் பதக்கத்தினை வெற்றி கொள்ளமுடிந்தது. எனவே என்னைப் போன்ற நிறையபேர் உள்ளனர். இதற்கான அடிப்படைவசதிகளை செய்து கொடுத்தால் நாங்கள் இன்னும் சாதிப்போம் எனதெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி,அடுத்தவருடம் நடைபெறவுள்ள தேசிய விழாவில் தங்கப் பதக்கத்தினை வெல்லவேண்டும் என்பதே தனது அடுத்த இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க,கிரிஜாவின் பயிற்சியாளரும்,கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பயிற்சியாளருமான உமாசுதன் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,

தேசிய பெரு விழாவரலாற்றில் கிழக்கு மாகாணத்துக்குமுதல் பதக்கத்தை எனது மாணவிகிரிஜா பெற்றுக் கொடுத்துள்ளார். உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தவெற்றியை முழு கிழக்கு மாகாணமுமே கொண்டாடும் என நம்புகிறேன். எங்களுக்கு எந்தவொரு வசதிகளும் இல்லை. ஆனாலும் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தான் கிரிஜா போன்ற வீரர்களுக்கு பயிற்சிகளை அளித்துவருகிறேன். அத்துடன்,மாதத்தில் 2 தடவைகள் இவர்களை பொலன்னறுவைக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிப்பேன்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை எந்தவொரு மைதானமும் எமக்கு இல்லை. இதற்கானவசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கஅதிகாரிகள் முன்வரவேண்டும். இன்று வடமாகாணம் எம்மைவிடவிளையாட்டுத்துறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். அங்குள்ள வீரர்களின் திறமைகள் உரியமுறையில் இனங்காணப்பட்டுள்ளன.

நாங்களும் இனிவரும் காலங்களில் குழு நிலை போட்டிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்காமல் தனிநபர் போட்டிகளுக்கும் முன்னுரிமை கொடுத்தால் நிச்சயம் எமது மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களும் தேசியமட்டத்தில் இன்னும் இன்னும் பதக்கங்களை வெல்வார்கள் என அவர் தெரிவித்தார்.

பீ.எப்.மொஹமட்

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை