அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பங்கு பற்றிய கபடிப் போட்டியில் நிந்தவூர் அல்-–அஷ்ரக் தேசிய பாடசாலை அணி வெள்ளிப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளது.
இம்மாதம் 11,12,13,14 ம் திகதிகளில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் அநுராதபுரம் மகுல மஹா வித்தியாலயம் மற்றும் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை ஆகிய இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் பங்கு பற்றியிருந்தன.
இதில் அல்-–அஷ்ரக் அணி 28 புள்ளிகளையும், அநுராதபுரம் மகுல மஹா வித்தியால அணி 36 புள்ளிகளையும் பெற்றதுடன் மேலதிக 08 புள்ளிகளால் தோல்வியைத்தழுவி வெள்ளிப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளது.
இதேவேளை, இந்த சாதனை வெற்றிக்கு துணையாகவிருந்த பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர், நிந்தவூர் கோட்ட கல்வி அதிகாரி எம். சரிப்டீன், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். சாஜித், ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம், பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள், கபடிப் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரிற்கும் பாடசாலை சமூகம் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
(நிந்தவூர் குறூப் நிருபர்)
from tkn