வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று அமரத்துவம் அடைந்த மாணவி தனூஜாவின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி அதிபர் ஜெரோமின் ஒழுங்கமைப்பில் நான்கு பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்று கடந்த வியாழக்கிழமை (ஒக்டோபர், 24) புனித மரியாள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

'அமரர் தனூஜா ஞாபகார்த்த வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி– 2019'எனப் பெயரிடப்பட்டு நடாத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரி முதலாம் இடத்தையும், மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும்,விபுலானந்தா கல்லூரி மூன்றாம் இடத்தையும்,மெதடிஸ்த பெண்கள் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும்,சான்றிதழ்களும்,பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.

திருகோணமலை குறூப் நிருபர்

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை