45ஆவது தேசிய விளையாட்டு விழா அனிதாவுக்கு கோலூன்றிப் பாய்தலில் தங்கம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் பெற்று சாதைன படைத்துள்ளார்.

பதுளையில் 45ஆவது தேசிய விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது.

தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே அனிதா தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் 3.30 மீற்றர் உயரம் தாண்டியே தங்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கனை உதேனி வென்றார். இவர் 3.10 மீற்றர் உயரம் தாண்டினார். வெண்கலப் பதக்கத்தை 3.00 மீற்றர் உயரம் தாண்டிய மேல் மாகாண வீராங்கைன எஸ்.கே.பெரேரா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Sat, 10/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை