கல்முனையில் புதிய ஜனநாயக முன்னணி காரியாலயம் திறப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் கல்முனை பிராந்திய காரியாலயம் அமைச்சர் அனோமா கமகேவினால் திறந்துவைக்கப்பட்டது .

கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர். செலஸ்டினா தலைமையில் சனிக்கிழமை(26) மாலை 6 மணியளவில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அனோம கமகே-, பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் திட்டங்களை வகுத்துள்ள எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நிச்சயமாக நிறைவேற்றி வைப்பார்.

இப் பிரதேசத்தில் பலர் தொழில் வாய்ப்பில்லாமல் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகிவருகின்றனர். இவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த சுய தொழில் முனைவோருக்கு சுய தொழில் ஊக்குவிப்பு திட்டகள் அறிமுகப்படுத்தி வைக்கபடும்.

இன்று அம்பாறை மாவட்டத்தில் 10 க்கு மேற்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயங்கள் பாணமை, பொத்துவில், கோமாரி, ஆலையடிவேம்பு, திருக்கோவில், தம்பிலுவில், அட்டாளச்சேனை, கல்முனை போன்ற பிரதேசங்களில் திறந்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கருணாரட்ன அத்துகோரள, ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ரஸ்ஸாக், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை