மட்டக்களப்பில் புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு 16ம் வட்டாரத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரசார அலுவலகமொன்று நேற்று (28) திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்பக் கைத்தொழில் சமூக வலவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். மட்டக்களப்பு 16ம் வட்டாரத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் பெண் செயற்பாட்டாளர் திருமதி ஆயிஷாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அலுவலகத் திறப்பு விழா வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் வி.கே.லிங்கராசா, மட்டு மாவட்ட ஐ.தே.க அமைப்பாளரும் வாழைச்சேனை கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளருமான மங்கள செனரத் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வட்டாரங்கள் தோறும் இவ்வாறான அலுவலகங்கள் திறக்கப்பட்டு பிரசார நடவடிக்கையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் சமூக வலவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை