சப்ரகமுவ பல்கலைக்கழக பரீட்சைகள் காலவரையரையின்றி ஒத்திவைப்பு

சப்ரகமுவ  பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  சம்பள முரண்பாடு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக கல்விசாரா  ஊ ழியர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க முன்னெடுப்புகளினால் இந் நிலைமை  ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று  உறுதிப்படுத்தியது.குறிப்பாக பல்கலைக்கழகத்தின் சமூக  விஞ்ஞான மொழிகள் பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்காக 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடாத்தப்படவிருந்த பரீட்சைகளை ஒத்தி  வைப்பதாக அறிவித்துள்ளது.மேலும் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும்  பீடாதிபதி பேராசிரியர் மனோஜ் ஆரியரத்ன நேற்று தெரிவித்தார்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Sat, 09/14/2019 - 10:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை