கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறுபேருக்கும் காலி நீதவான் நீதிமன்றம் இம்மாதம் 25ஆம் திகதிவரை விளக்கமறியல் விதித்துள்ளது.
விளக்கமறியல் கைதியான பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6பேர் ரத்கம பொலிஸாரால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரானை பார்க்க வந்த மேற்படி உறவினர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை மீட்ட சிறைச்சாலை அதிகாரிகள், அதிலிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ரத்கம பொலிஸார், கஞ்சிபானை இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட அங்கு வந்திருந்த 6 பேரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லக்ஷ்மி பரசுராமன்
from tkn