சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய இருவர் கைது

வாழைச்சேனையிலிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கடத்திய இருவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய லொறியையும் மீட்டுள்ளனர். இன்று(2) காலை காத்தான்குடி பிரதான வீதியில் கடமையிலிருந்த பொலிசார் வீதிச்சோதனையின்போது குறித்த லொறியை மடக்கிப்பிடித்தனர்.

குறித்த லொறியில் 12 மாடுகள அடைத்து சட்டவிரோதமான முiறையில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிந்தக விஜேசிங்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு- குறூப் நிருபர்-

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை