"யார் எதைக்கூறினாலும் இத்தருணத்தில் பிரபலமான அரசியல் கட்சியாக சிறிலங்கா பொதுஜன பெரமுன இருப்பதனால், ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்" என அவரது ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி தெரிவித்தார்.
இதேவேளை, சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரால் ஒருபோதும் இத்தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை அக்கட்சியினர் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைவதை விரும்பாத பலர், ஜனாதிபதி
வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ, மொட்டுச் சின்னத்திலன்றி வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று 13வது அரசியலமைப்புத் திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் சில திருத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
from tkn