மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

கிரான் புலிபாய்ந்தகல் கோராவெளி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மரக்குற்றிகள் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கொண்டுவரப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நேரடி நடவடிக்கையின் பயனாக மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோராவெளி பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 93 மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி எட்டு இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சட்டவிரோதமான மரக்குற்றிகள் கொண்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்றி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

கல்குடா தினகரன் நிருபர்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை