சூடானில் வெள்ளம்: 62 பேர் உயிரிழப்பு

சூடானில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

பல நூறு கிராமங்களை பாதித்திருக்கும் இந்த வெள்ளத்தினால் 98 பேர் காயமடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

18 இல் 17 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதோடு 35,000க்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்திருப்பதாக அரச ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடும் மழையால் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நைல் நதியை ஒட்டிய பிராந்தியங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வறிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை