நடுவானில் விமானங்கள் மோதி 7 பேர் உயிரிழப்பு

ஹெலிகொப்டர் ஒன்றும் இலகுரக விமான ஒன்றும் நடுவானில் மோதியதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர்.

ஸ்பெயினின் பிரபல சுற்றுலா தலமான மயோர்கா தீவில் விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் இருவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐந்து பேர் பயணம் செய்த ஹெலிகொப்டர், இருவரை ஏற்றிச் செல்லக்கூடிய இலகுரக விமானத்துடன் கடந்த ஞாயிறு பிற்பகல் மோதியது. விமானத்தின் வால் பகுதி வீதியில் கிடக்கும் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. மற்ற பாகங்கள் அருகில் உள்ள பண்ணையில் விழுந்தன.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் ஜெர்மனின் ரோட்டார் ப்ளக் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ள நிலையில் விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் இரங்கல் தெரிவித்தார்.

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை