ஹாஜியார் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் முள்ளிப்பொத்தானை புஹாரி அணி சம்பியன்

தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி ஹாஜியார் மற்றும் மீரா நகர் சுதந்திர விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய ஹாஜியார் கிண்ணம் -2019 மென்பந்து இறுதிச் சுற்றுப் போட்டி (16) மீரா நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

முள்ளிப் பொத்தானை புஹாரி விளையாட்டுக் கழகமும் மீரா நகர் சுதந்திர விளையாட்டுக் கழகமும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியிருந்த நிலையில் இறுதிச் சுற்றில் புஹாரி அணி வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சூட்டிக் கொண்டது.

இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் பணப்பரிசில்கள், கேடயங்களையும் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் வழங்கி வைத்தார்

இதில் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, றஜீன், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், உட்பட கட்சி சமுக சேவகன் ஏ.சி. நஜிமுதீன் ஆதரவாளர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்து வெற்றி பெற்ற புகாரி அணிக்கு காசோலையை மற்றும் கேடயம் வழங்குவதை படத்தில் காணலாம்.

முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர்

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை