பயணித்த விமானத்தில் தனியே விடப்பட்ட பெண்

ஏயார் கனடா விமானம் ஒன்றில் விமானப் பயணத்தின்போது உறங்கிய பெண் ஒருவர் பயணத்தின் பின் அந்த விமானத்தில் தனியே விடப்பட்டுள்ளார்.

கியுபக்கில் இருந்து டொரொன்டோ நகருக்கு கடந்த ஜூன் 9ஆம் திகதி பயணித்தபோது இந்த அனுபவத்திற்கு முகம்கொடுத்ததாக டிப்பினி அடம்ஸ் என்ற அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். விமானத்தில் உறங்கிய நிலையில் விழித்தபோது உறையும் குளிரில் போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக இரவில் பயத்தை உணர்வதாக அவர் விபரித்துள்ளார்.

அந்த சம்பவம் உண்மை என்பதை உறுதி செய்த ஏயார் கனடா விமான சேவை அது பற்றி விசாரணை நடத்துவதாக தெரிவித்தது.

விமானம் தரையிறங்கிய ஒரு சில மணிநேரம் கடந்து உறையும் குளிரில் கடும் இருளுக்கு மத்தியில் தான் விழித்தெழுந்ததாக அடம்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விமான அறையில் இருந்து கிடைத்த மின்விளக்கு ஒன்றை பயன்படுத்தி அவசர உதவிக்கான சமிக்ஞையை விடுத்தே அவர் விமானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை