உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

அட்டாளைச்சேனை அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி நிலையத் திறப்பு விழா மற்றும் உறுப்பினர் ஒன்றுகூடல் நிகழ்வுகள் 'இப்தார்' நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

அட்டாளைச்சேனை அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத் தலைவர் எஸ்.எம்.எம்.நிஸாம்தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான

யூ.கே.ஆதம்லெவ்வை (லொயிட்ஸ்) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத், கிராம உத்தியோகத்தர் யூ.எல்.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் விஷேட அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.உடற்பயிற்சி நிலையத்திற்கான உபகரணத் தொகுதியை ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான

யூ.கே.ஆதம்லெவ்வை ரூபா 5 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைத்தமைகுறிப்பிடத்தக்கது.

அஷ்ரஃப் விளையாட்டுக் கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை