இலங்கை –ஸ்கொட்லாந்து போட்டி மழையால் ரத்து

ஸ்கொட்லாந்து–இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஸ்கொட்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

ஸ்கொட்லாந்து–இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி மே 18ஆம் திகதி எடின்பேர்க் மைதானத்தில் நடைபெறவிருந்தது. தொடர்ந்து மழை பொழிந்து வந்த நிலையில் போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சில மணிநேரங்களுக்கு பின் மழை நின்றவுடன் நடுவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, ஒரு பந்து கூட வீசாத நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில், இலங்கை அணித்தலைவராக திமுத் கருணாரத்ன செயல்படவிருந்தார். அவர் அணித்தலைவராக களமிறங்கவிருந்த முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாக இது அமையவிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ள நிலையில் நாளை இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டவாது போட்டி நடைபெறவுள்ளது.

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை