நாடு முழுவதும் இன்று (13) இரவு 9.00 மணி முதல் நாளை (14) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு, உச்சபட்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரையும் கம்பஹாவில் நாளை (14) அதிகாலை 6.00 மணி வரையும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mon, 05/13/2019 - 20:31
from tkn