சமூக வலைத்தள சொல் வீரர்களுக்கு 3 - 7 வருட சிறை

RSM
சமூக வலைத்தள சொல் வீரர்களுக்கு 3 - 7 வருட சிறை-3-7 Year Jail Sentence for Racist Social Media Post

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும் இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பில் ஆராய விசேட பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பிரிவின் மூலம், குற்றவாளிகளாக இனங்காணப்படும் நபர்களுக்கு 3 முதல் 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என, ருவன் குணசேகர தெரிவித்தார்.

Mon, 05/13/2019 - 19:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை