மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.  

மஸ்கெலியா பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் நேரடியாக முறையிடலாம் அத்துடன் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.  

11ஆம் திகதி மஸ்கெலியா லக்கம் தமிழ் பாடசாலையிலும், 12ஆம் திகதி மஸ்கெலியா சாமிமலை கௌரவில தமிழ் பாடசாலையிலும் காலை 9மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112505569 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.  

(தலவாக்கலை குறூப் நிருபர்)

Fri, 05/10/2019 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை