பல்கலைக்கழகங்களை எதிர்வரும் வாரம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், எதிர்வரும் வாரமளவில் பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவர்கள் திருப்தி அடைந்தால், அவற்றை மீளத் திறப்பதற்காக 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் தான் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழகங்களின் வளாகம் மிகப் பெரியது. ஆகையால், பல்கலைக்கழக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தியடைய நீண்டநாள் பிடிக்கும் என தெரிவித்தார். 

மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒரேநேரத்தில் திறக்க முடியா விட்டாலும், சில பீடங்களையாவது திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமைச்சர் தெரிவித்தார். 

Fri, 05/10/2019 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை