வீதியின் மீது ‘கிரேன்’ விழுந்து நால்வர் பலி

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கட்டுமான கிரேன் ஒன்று வீதியில் விழுந்ததில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கட்டிட நிர்மாணத் தளத்தில் இருந்த கிரேன் ஒன்று வீதியில் இருந்து கார்கள் மீது விழுந்துள்ளது. இதில் இரு கிரேன் ஓட்டுநர்கள் மற்றும் இரு கார்களில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

பெண் மற்றும் அவரது குழந்தையுடன் 20 வயதுகளில் உள்ள ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கடும் காற்றுக் காரணமாக கிரேன் இரண்டாக உடைந்து விழுந்ததாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதி கட்டிடத்தின் மீதும் மற்றப் பகுதி வீதியிலும் விழுந்தது. இதனால் கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடமும் மோசமாக சேதமடைந்துள்ளது.

அமெரிக்காவின் எந்த நகரிலும் இல்லாத அளவுக்கு சியாட்டில் நகரில் அதிகளவிலான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதம் சியாட்டில் நகரில் 60 கிரேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12 கிரேன்கள் மட்டுமே உள்ளன.

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை