கத்திக் குத்துக்கு முயன்றதாக பலஸ்தீன சிறுமி சுட்டுக்கொலை

ஜெரூசலத்திற்கு அருகில் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ஒருவர் மீது கத்துக் குத்து தாக்குதலுக்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு 16 வயது பலஸ்தீன சிறுமி ஒருவர் இஸ்ரேலிய பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அந்த சிறுமி கத்தி ஒன்றுடன் அதிகாரியை நோக்கி வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் எந்த ஒரு இஸ்ரேலியருக்கும் காயம் ஏற்படவில்லை.

ரமல்லா நகரைச் சேர்ந்த ஷமாஹ் சுஹைர் முபாரக் என்ற சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

இது ஒரு அபாயகரமான நிலைமை என்று இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் மிக்கி சொன்பிளட் குறிப்பிட்டுள்ளார். எனினும் பலஸ்தீனர்களுக்கு எதிராக அளவுக்கு மீறிய பலப்பிரயோகத்தை பயன்படுத்துவதாக இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

Fri, 02/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை