மேலும் மூன்று ஆளுநர்கள் நியமிப்பு

மேலும் மூன்று ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன், சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக ஆகியோர் இன்று (07) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.  

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை (04) ஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதேவேளை தென் மாகாணத்துக்கான ஆளுநர் இன்னும் நியமிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 01/07/2019 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை