வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் குரேயை மீண்டும் நியமிக்க கோரிக்கை

வடமாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரேயை மீண்டும் வடமாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர்களை பொது அமைப்புகள்,மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இன்று (07) அனுப்பி வைத்துள்ளன.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக  காலை 9.30மணியளவில் ஒன்றுகூடிய இவர்கள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.தெய்வேந்திரத்திடம் ஜனாதிபதிக்கான கோரிக்கை கடிதங்களை கையளித்தனர்.

நல்லை ஆதீன பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராசா,தமிழ் மக்கள் மேம்பாட்டு ஒன்றியம்,முல்லைத்தீவு கிளிநொச்சி பூநகரி கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்,தென்மராட்சி சமுர்த்தி பயனாளிகள் சங்கங்கள்,சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஸ்வேலாயுதம்,விரிவுரையாளர்கள்,நலன்விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

எமது மொழியில் எம்முடன் பேசும் றெஜினோல்ட் குரே மீண்டும் எமக்கு வேண்டும் இனவாதம் இல்லாத ஆளுநர் மீண்டும் வேண்டும் மனிதம் நேயம் நிக்க நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஆளுநர் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கி நின்றனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர்-பாறுக் ஷிஹான்)

Mon, 01/07/2019 - 14:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை