போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளொட் அமைப்பினர் உதவி

புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், "புளொட்" அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளைத் தோழர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக, இரு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஐவருக்கு துவிச்சக்கர வண்டிகளும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்றுசக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இத் திட்டத்தின் கீழ்பயனாளிகளுக்கான முற்சக்கர வண்டி மற்றும் துவிச்சக்கர வண்டிஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர்தர்மலிங்கம் சித்தார்த்தன், வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சஜீவன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரால்வழங்கி வைக்கப்பட்டன. 

(புங்குடுதீவு குறுப் நிருபர்-பாறுக் ஷிஹான்)

Mon, 01/07/2019 - 15:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை