புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (28) பிற்பகல் 2.20 மணி அளவில் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 5 தோட்டக்களை தன் வசம் வைத்திருந்த குறித்த நபரை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்குளி, சமித்திபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மஹவத்தகே பிரசன்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாழைத்தோட்டம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Fri, 12/28/2018 - 16:30
from tkn