முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடலில் அமைச்சர்களான ரிசாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, தயா கமகே, ஜே.சி. அலவத்துவல, இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், ஹரிசன் டீ சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், டக்ளஸ் தேவானந்தா, சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவமோகன் வடமாகாண ஆளுநர், ரெஜினோல்ட் குரே, பொலிஸ்மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக கடந்த 21 ஆம் திகதி திடீரென வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு மாவட்டங்களும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததோடு, பல்வேறு பாதிப்புக்களையும் சந்தித்தனர்.
(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)
from tkn