ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் உள்ளிட்ட நால்வர் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி, கொடகவெல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, அவர் இன்றையதினம் (28) பெல்மதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த நால்வரும் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி பெல்மதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி கொடகவெல நகரில் வைத்து, நபர் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் அவர்கள் அன்றைய தினம் (20) கொடகவெல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.
from tkn