இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர்களில் ஒருவரான டொக்டர் பி.எம்.ஜி.பி சிறில் (வயது 89) மின்தூக்கி (லிஃப்ட்) உடைந்து விழுந்த விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் சிறில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மின்தூக்கியில் முன்னாள் அமைச்சருடன் சென்ற அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் மூன்றாம் மாடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளை பார்வையிடுவதற்காக மின்தூக்கி மூலம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Tue, 06/27/2023 - 06:00
from tkn