இலட்சிய இணைப்பு திட்டம் பற்றி பேச்சு

இந்தியாவையும் மத்திய கிழக்கு நாடுகளையும் வீதிகள், ரயில்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக இணைப்பதை இலக்காகக் கொண்ட பாரிய கூட்டு உட்கட்டமைப்பு வசதிகள் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலட்சிய இணைப்பு திட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவிருக்கும் இத்திட்டம் குறித்த முன்மொழிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய உயர் மட்டத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இப்பேச்சுவார்த்தையில் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் பங்குபற்றியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ரயில் போக்குவரத்து கட்டமைப்பை நிர்மாணித்தல், எல்லை தாண்டிய மின்சாரப் பகிர்வு ஏற்பாடுகள் அடங்கலாக பல திட்டங்கள் இந்த உத்தேச திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

Thu, 05/18/2023 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை