அடுத்த ஆண்டில் புதிதாக ஆட்சேர்ப்பு கிடையாது

அமைச்சர் கஞ்சன டுவிட்டரில் தெரிவிப்பு

இலங்கை மின்சார சபையில் புதிய ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறாது என தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்சார சபையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 3.5 முதல் 3.7 பில்லியன் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1,100 ஊழியர்களில் இருவர் 2023 இல் ஓய்வு பெறுவார்கள் என்றும் புதிய ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Sat, 12/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை