மத்தளவிலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள்

நேற்று ஆரம்பம்; ரெட்விங்ஸ் 398 பயணிகளுடன் தரையிறங்கியது

ரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான சேவை நேற்று முதல் இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான விமானசேவைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் 398 சுற்றுலாப் பயணிகளுடன் முதலாவது விமானம் மத்தள சர்வதேச  விமான நிலையத்தை வந்தடைந்ததாக அந்த விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டு மே 14ஆம் திகதிவரை ரஷ்யாவின் ரெட்வின்ங்ஸ் விமான சேவை ரஷ்யாவுக்கும் இலங்கையில் மத்தள விமான நிலையத்திற்குமிடையில் நடைபெறுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அசூர் மற்றும் எரொப்ளோட் விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளன. அந்த விமான சேவைகள் நடைபெற்றுவரும் நிலையிலேயே ரெட்வின்ங்ஸ் விமானசேவை நிறுவனமும் தமது விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி 2 நேரடி விமானப் பயணங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 12/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை