டென்மார்க் தலைநகரில் சூடு; மூவர் உயிரிழப்பு

டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பரிசோதகர் சோரன் தோமசன் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞருக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 17 வயதுடைய இரு டென்மார்க் பிரஜைகள் மற்றும் 47 வயதான ரஷ்ய நாட்டவர் கொல்லப்பட்டிருப்பதோடு நால்வர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tue, 07/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை