சிறுவனுக்கு எமனான ரம்புட்டான் பழம்

யாழ்ப்பாணத்தில் சோக சம்பவம்

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த

தர்மராசா தர்சிகன் (வயது -10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய நிலையில், திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது . சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தற்பொழுது ரம்புட்டான் பழம் அதிகளவில் சந்தைக்கு வந்துள்ளதோடு சிறுவர்கள் அதனை ஆர்வமாக சாப்பிட்டு வருவது தெரிந்ததே.

யாழ்.விசேட நிருபர்

Tue, 07/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை