பஸ்களுக்கு சேதங்களை விளைவித்தோரிடமிருந்தே நட்ட ஈட்டை பெற முயற்சி

நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது பஸ்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது, வழக்குத் தொடரப்பட்டு அவர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பில் (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், பஸ்களை சேதப்படுத்திய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானயில் இடம்பெற்ற போராட்டத்தின்போது, இராணுவத்தின் பஸ்சுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந் நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தெரணியகலை பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் வாகன உதிரிபாக விற்பனை நிலையமொன்றில் பணியாற்றுபவரென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

 

Sat, 05/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை