களுவாஞ்சிக்குடியிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 பேர் கைது

கடற்கரை பகுதியில் படகுடன் கைதாகினர்

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு

மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லமுற்பட்ட 21 பேரே வியாழக்கிழமை(19) அதிகாலை புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இரண்டு இயந்திரப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, புதன்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்தனர். இதன்போது இரு படகுகளில் அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய 04 பெண்களும் ,17 ஆண்களுமாக, 21 பேர் கைதானதுடன் இரு படகுகளும் மீட்கப்பட்டன.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் திருகோணமலை மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Fri, 05/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை