வரிசையில் நின்ற 71 வயது நபர் மயங்கி வீழ்ந்து மரணம்

வரிசையில் நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த 71 வயதுடைய நபர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வத்தேகம, உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், சமைப்பதற்கும், விளக்குகளை ஏற்றுவதற்கும், அத்தியாவசிய உபகரணங்களை இயக்குவதற்குமாக பல வறிய இலங்கையர்கள் பயன்படுத்தும் பெற்றோலியப் பொருளான மண்ணெண்ணையைப் பெறுவதற்காக காலையில் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவ்வாறு சென்ற நபர் பல மணி நேரம் வரிசையில் நின்று எரிபொருள் வழங்கும் இடத்தை நெருங்கிய நிலையில் இவ்வாறு மயக்கமுற்றுள்ளார். குறித்த வேளையில் மழையும் பெய்திருந்ததாக அங்கு வரிசையில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து மயங்கி வீழ்ந்தவருக்கு அங்கிருந்தவர்கள் நீர் வழங்கியுள்ளனர்.

அதன் பின் அங்கு வந்த பொலிஸார் ஒருவர் அவரை அம்பியூலனஸ் வண்டியில் ஏற்றி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.

Sun, 03/20/2022 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை