நல்லூரானை தரிசித்த எதிர்க்கட்சித் தலைவர்

நேற்று காலை நேரில் வழிபாடு

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுக்காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று தனது மனைவி சகிதம் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வடமாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர், வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான நேற்று, காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

 

யாழ்.விசேட நிருபர்

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை