பெரும்போகத்திற்கான சேதன பசளை விநியோகம் ஆரம்பம்

பெரும்போகத்திற்கான சேதன பசளை விநியோகம் ஆரம்பம்

நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (12) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொணராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு சேதன உர விநியோகத்தில் முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 10/14/2021 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை