கிழக்கு ஆளுநருடன் நோர்வே நெதர்லாந்து தூதர்கள் சந்திப்பு

கிழக்கில் விவசாய விருத்தி குறித்து பேச்சு

 

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு நேற்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப் பசளையை  ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து நாடுகளும் கிழக்கு மாகாணத்தை அவதாணித்துக் கொண்டிருப்பதாகவும், கிழக்கின் விவசாயத்தை ஊக்குவிக்கும் விடயத்தில் மிகவும் கரிசனையாக இருப்பதாகவும் நெதர்லாந்து உயரிஸ்தானிகர் குறிப்பிட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

நெதர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் சேதனப் பசளை தயாரிக்கும் விடயத்தில் சர்வதேச மட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் கல்வி, விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.இச் சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசேகர மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை