விலையேற்றத்தை கட்டுப்படுத்த சுரேஷ் கோரிக்கை

பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்  செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல தனியார் நிறுவனங்களும் தன்னிச்சையாக பொருட்களின் விலையை அதிகரித்துக் கொண்டே போகுகிறார்கள். இதன் விளைவாக நடுத்தர இலாபம் ஈட்டக்கூடிய மக்களும் அரசாங்க உத்தியோகத்தர்கள், பெருந்தோட்ட மலையகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. மலையகத்தைப் பொறுத்தவரை பெருந்தோட்ட நிறுவனங்களின் அடாவடி செயற்பாடுகளின் விளைவாக மலையக தொழிலாளர்களின் ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் பொருட்களின் விலை ஏற்றம் வெளியாட்கள் மூலம் பெருந்தோட்ட நிலங்கள் அபகரிப்பு என இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் தொடர்ந்து முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இத்தகைய செயற்பாடுகளை அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும் .

மலையக மக்களின் இருப்பு மற்றும் அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரண்டு தினங்களுக்கு விவாதங்களை மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு மின்னஞ்சல் ஒன்றினூடாக அறிவித்து இருக்கின்றேன்” என தெரிவித்தார்'''

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை