சீனாவில் படகு கவிழ்ந்து பத்துப் பேர் உயிரிழப்பு

சீனாவின் தெற்கிலுள்ள குவிச்சோ பகுதியின் ஸாங்கே ஆற்றில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐவரைக் காணவில்லை. படகிலிருந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என நம்பப்படுகிறது.

சில்லிங் சிப்பிங் நிறுவனத்தின் அந்தப் படகில் அதிகபட்சம் 40 பேர் பயணம் செய்யலாம். ஆனால், அதில் 46 பேர் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் 31 பேரைக் காப்பாற்றியுள்ளனர். அவர்களில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குவிச்சோவில் கனத்தமழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியது. அதனாலும், அதிகமானோர் ஏற்றப்பட்டிருந்ததாலும் படகு கவிழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  

இந்நிலையில் கடும் மழை காரணமாக காணாமல் போனோரைத் தேடும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tue, 09/21/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை