மக்கள் பொறுப்புடன் நடந்தால் மட்டுமே கொரோனா கட்டுப்படும்

இல்லாவிடின் நாட்டை முடக்கியும் பயனில்லை

நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறினால் நாட்டை முடக்கியும் தீவிர வைரஸ் பரவலைத் தடுக்க முடியாமற்போகும் என கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் டெல்டா திரிபு கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது மிக முக்கியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் டெல்டா திரிபு வைரஸ் மிக வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸாகும். ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் கவனமெடுத்தால் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பாக அமையும்.

இதுவரை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று எந்த வகை தடுப்பூசியானாலும் அதனைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து வகை கொரோனா தடுப்பூசிகளும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடியதே என்பதை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே அனைவரும் ஏதாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகும். நாட்டில் அனைத்து மக்களும் பொறுப்புடன் செயற்பட்டு தமக்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். மனித உயிருடன் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் இது என்றும் இராஜாங்க அமைச்சர் எச்சரித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை