மண் அகழும் இயந்திரத்தில் சிக்கி 12 வயது சிறுவன் பலி

எம்பிலிப்பிட்டிய பகுதியில் சம்பவம்

மண் அகழும் இயந்திரம் ஒன்று மோதியதால் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய, பணாமுர - கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று கடுவன பிரதேசம் நோக்கி கற்களை ஏற்றிச்சென்ற பாரஊர்தியொன்றை மேடான பிரதேசத்தில் வைத்து மேற்படி மண் அகழும் இயந்திரம் தள்ளிக்கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் பாரஊர்தியில் ஏற முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்போது, மண்அகழும் இயந்திரத்தின் முன்பக்க சில்லில் சிக்குண்டு சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் சிறுவனை எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் தடயம்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மண்அகழும் இயந்திர இயக்குநர் பனாமுர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை